புதிய உச்சத்தை தொட்ட தங்கத்தின் விலை! ரூ.3,640 உயர்ந்தது கவலையில் மக்கள்

புதிய உச்சத்தை தொட்ட தங்கத்தின் விலை! ரூ.3,640 உயர்ந்தது கவலையில் மக்கள்
புதிய உச்சத்தை தொட்ட தங்கத்தின் விலை! ரூ.3,640 உயர்ந்தது கவலையில் மக்கள்

வரலாறு காணாத வகையில் ரூ.30,000-த்தை தாண்டி தங்கத்தின் விலை புதிய உச்சத்தை தொட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இன்று தங்கத்தின் விலை ரூ.288 உயர்ந்து, ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.30,120-க்கு விற்கப்படுகிறது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.30 உயர்ந்து, ரூ.3,765-க்கு விற்கப்படுகிறது. கடந்த 40 நாட்களில் சவரனுக்கு தங்கத்தின் விலை ரூ.3,640 உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதேபோல் வெள்ளி விலை ரூ.2.60 உயர்ந்து ரூ.55.20-க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று காலை ரூ.29,744-க்கும், மாலை ரூ.29,832-க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு சவரன் தங்கம் இன்று வரலாறு காணாத அளவிற்கு ரூ.30,120 விற்கபடுவது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.