*மணிப்பூர்: உக்ருலில் மீண்டும் வன்முறை - 5 நாட்களுக்கு இணைய சேவை முடக்கம்; ஊரடங்கு அமல்!*
*மணிப்பூர்: உக்ருலில் மீண்டும் வன்முறை - 5 நாட்களுக்கு இணைய சேவை முடக்கம்; ஊரடங்கு அமல்!*
மணிப்பூர் மாநிலம் உக்ருல் மாவட்டத்தின் லிட்டன் பகுதியில் இரு சமூகத்தினரிடையே ஏற்பட்ட மோதலில் வீடுகளுக்குத் தீ வைக்கப்பட்டதைத் தொடர்ந்து, அங்குப் பதற்றத்தைத் தணிக்க மாவட்ட நிர்வாகம் ஊரடங்கு உத்தரவைப் பிறப்பித்துள்ளது; மேலும் வதந்திகள் பரவுவதைத் தடுக்க 5 நாட்களுக்கு இணைய சேவைகள் முடக்கப்பட்டுள்ளது.
புதிய அரசு பதவியேற்ற சில நாட்களிலேயே உக்ருல் மாவட்டத்தில் மீண்டும் வன்முறை வெடித்துள்ளது; ஆயுதம் ஏந்திய கும்பல் வீடுகளைக் கொளுத்திய சம்பவத்தைத் தொடர்ந்து, சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க பிஎன்எஸ்எஸ் (BNSS) சட்டத்தின் 163-ஆவது பிரிவின் கீழ் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது




