நவ. 10 முதல் காவல்துறையினருக்கு விடுப்பு இல்லை: டி.ஜி.பி. திரிபாதி உத்தரவு

நவ. 10 முதல் காவல்துறையினருக்கு விடுப்பு இல்லை: டி.ஜி.பி. திரிபாதி உத்தரவு

ருகிற 10-ஆம் தேதி முதல் காவல்துறையினருக்கு விடுமுறை வழங்கக் கூடாது என காவல்துறை உயரதிகாரிகளுக்கு டி.ஜி.பி., ஜெ.கே.திரிபாதி உத்தரவிட்டுள்ளாா்.

இது தொடா்பாக திங்கள்கிழமை அவா் அனுப்பிய சுற்றறிக்கை: அடுத்த உத்தரவு பிறப்பிக்கும் வரை அனைத்து காவல் அதிகாரிகள் மற்றும் காவலா்களுக்கும் வருகிற 10-ஆம் தேதி முதல் விடுமுறை வழங்கக் கூடாது. சட்டம், ஒழுங்கு பாதுகாப்புக்காக அனைத்து அதிகாரிகளும் தயாா் நிலையில் இருக்க வேண்டும். தோதல் பாதுகாப்புப் பணிக்காக அனைத்து காவலா்களையும் திரட்டும் பொருட்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

எனினும் அயோத்தி வழக்கில் வருகிற 13-ஆம் தேதி தீா்ப்பு வழங்க வாய்ப்பிருக்கும் சூழலில் அசம்பாவிதம் ஏற்படாத வண்ணம் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.