இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 166- பேருக்கு கொரோனா

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 166- பேருக்கு கொரோனா
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 166- பேருக்கு கொரோனா

இந்தியாவில் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்துள்ளது. கடந்த பல வாரங்களாகவே கொரோனா தொற்று பாதிப்பு படிப்படியாக குறைந்து வருவது மக்களுக்கு நிம்மதியை கொடுத்துள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 166- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நாட்டில் இதுவரை கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 4,46,73,949- ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 4,672- ஆக குறைந்துள்ளது. கொரோனா பாதிப்பால் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 5,30,638 - ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவில் இருந்து குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 4,41,39,056 ஆக உயர்ந்து உள்ளது.

இந்தியாவில் இதுவரை மட்டும் 219.94 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இந்த தகவலை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது.