????ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 6 ஆம் தேதி உலகெங்கும் 'உலக விலங்குவழி நோய் தினம்' (World Zoonoses Day) கடைப்பிடிக்கப்படுகிறது. விலங்குகளில் இருந்து மனிதர்களுக்குப் பரவக்கூடிய 'சூனோடிக்' (Zoonotic) எனப்படும் தொற்றுநோய்கள் குறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்துவதே இந்நாளின் முக்கிய நோக்கமாகும். கடந்த 1885 ஆம் ஆண்டு ஜூலை 6 ஆம் தேதியன்று, பிரெஞ்சு வேதியியலாளர் லூயிஸ் பாஸ்டர் ரேபிஸ் (வெறிநாய்க்கடி) நோய்க்கான முதல் தடுப்பூசியை வெற்றிகரமாகக் கண்டறிந்து செலுத்திய வரலாற்றுச் சிறப்புமிக்க தினத்தை நினைவுகூரும் வகையில் இந்நாள் பிரகடனப்படுத்தப்பட்டது. தற்போதைய சூழலில் நாம் சந்திக்கும் எபோலா, பறவைக் காய்ச்சல், ரேபிஸ் மற்றும் கொரோனா போன்ற பல ஆபத்தான நோய்த்தொற்றுகள் விலங்கினங்கள் மூலமாகவே மனிதர்களுக்குப் பரவியுள்ளன என்பதை மருத்துவ உலகம் சுட்டிக்காட்டுகிறது. காடழிப்பு, வனவிலங்குகளுடன் மனிதர்களுக்கு ஏற்படும் நெருங்கிய தொடர்பு மற்றும் முறையற்ற இறைச்சிக் கையாளுதல் போன்றவற்றால்