நாமக்கல் மாவட்டத்தில் 378 முகாம்களில் கொரோனா தடுப்பூசி-கலெக்டர் ஸ்ரேயாசிங் தகவல்

நாமக்கல் மாவட்டத்தில் 378 முகாம்களில் கொரோனா தடுப்பூசி-கலெக்டர் ஸ்ரேயாசிங் தகவல்
நாமக்கல் மாவட்டத்தில் 378 முகாம்களில் கொரோனா தடுப்பூசி-கலெக்டர் ஸ்ரேயாசிங் தகவல்

நாமக்கல் மாவட்டத்தில் இன்று (சனிக்கிழமை) 26-வது கட்டமாக மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு ஆஸ்பத்திரிகள், ஊட்டச்சத்து மையங்கள் என 332 நிலையான முகாம்கள், 46 நடமாடும் குழுக்கள் மூலம் என மொத்தம் 378 முகாம்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது. காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தடுப்பூசி முகாம் நடைபெறும்.


இதில் 210 டாக்டர்கள், 430 செவிலியர்கள், 1,400 ஆசிரியர்கள் உள்பட 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பணிகளில் ஈடுபட உள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில் ஏற்கனவே நடந்து முடிந்த 25 சிறப்பு தடுப்பூசி முகாம்களில் 7 லட்சத்து 46 ஆயிரத்து 578 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.