அதிமுக மாநாட்டிற்கு வந்தபோதும், வீடு திரும்பும்போதும் மரணம் அடைந்த 8 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.6 லட்சம்: எடப்பாடி அறிவிப்பு

அதிமுக மாநாட்டிற்கு வந்தபோதும், வீடு திரும்பும்போதும் மரணம் அடைந்த 8 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.6 லட்சம்: எடப்பாடி அறிவிப்பு
அதிமுக மாநாட்டிற்கு வந்தபோதும், வீடு திரும்பும்போதும் மரணம் அடைந்த 8 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.6 லட்சம்: எடப்பாடி அறிவிப்பு

அதிமுக மாநாட்டில் கலந்து கொள்ள வருகை தரும்போதும், வீடு திரும்பும்போதும் எதிர்பாராத விதமாக மரணம் அடைந்த 8 பேர் குடும்பத்திற்கு தலா ரூ.6 லட்சம் வழங்கப்படும் என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி: அதிமுக சார்பில் நேற்று முன்தினம் நடைபெற்ற மாநாட்டுக்கு வருகை தரும்போதும், மாநாடு முடிந்து வீடு திரும்பும்போதும் எதிர்பாராத விதமாக, விழுப்புரம் மாவட்டம், வல்லம் வடக்கு ஒன்றிய இலக்கிய அணி இணை செயலாளரும், நெகனூர் வடகொல்லை கிளை செயலாளருமான பி.பொன்னுசாமி, திருப்பத்தூர் மாவட்டம், கந்திலி மேற்கு ஒன்றியம், மண்டல நாயனகுண்டா ஊராட்சி, பத்திரிகானூர் கிளை செயலாளர் சென்னையன், கோவை மாநகர் மாவட்டம், காந்திபுரம் பகுதி எம்.ஜி.ஆர். இளைஞர் அணி துணை செயலாளர் சி.கதிரேசன், கோவை புறநகர் தெற்கு மாவட்டம், பெரியநெகமம் பேரூராட்சி, 13வது வார்டு அவைத்தலைவர் எஸ்.பழனிச்சாமி, கோவை புறநகர் வடக்கு மாவட்டம், நரசிம்மநாயக்கன்பாளையத்தை சேர்ந்த மாரிமுத்து, தென்காசி வடக்கு மாவட்டம், குருவிகுளம் வடக்கு ஒன்றிய செயலாளர் ஆர்.வாசுதேவன், விருதுநகர் கிழக்கு மாவட்டம், வெம்பக்கோட்டை மேற்கு ஒன்றியம், லட்சுமியாபுரம் கிளை கழகத்தை சேர்ந்த கடற்கரை, புதுக்கோட்டை வடக்கு மாவட்டம், அன்னவாசல் வடக்கு ஒன்றிய செயலாளரும், ஊராட்சி ஒன்றிய குழு 10வது வார்டு உறுப்பினரும், அன்னவாசல் நிலவள வங்கி தலைவருமான பி.சாம்பசிவம் ஆகியோர் மரணமடைந்துவிட்டனர்.

இவர்களை இழந்து வாடும் அவர்களது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். வாகனங்களில் செல்லும்போது எதிர்பாராத விதமாக நிகழ்ந்த சாலை விபத்தில் சிலர் காயமடைந்துள்ளனர். இறந்தவர்களின் குடும்பத்திற்கு அதிமுக சார்பில் தலா ரூ.6 லட்சம் வழங்கப்படும். அதேபோல், வாகன விபத்துகளில் படுகாயமடைந்து, மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு, தலா ரூ.1,50,000, காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.