அரிமா ஆண்டின் முதல் நாளை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் மற்றும் அன்னதானம்

அரிமா ஆண்டின் முதல் நாளை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் மற்றும் அன்னதானம்

அரிமா ஆண்டின் முதல் நாளை முன்னிட்டு வெங்கிஸ்வரர் சிவன் ஆலயத்தில் சிறப்பு அபிஷேகம் மற்றும் அன்னதானம்

சென்னை: அரிமா ஆண்டின் தொடக்க முதல் நாளை முன்னிட்டு, சென்னை சங்கமம் சங்கத்தின் சார்பில் இன்று காலை வடபழனி–சைதாப்பேட்டை சாலையில் அமைந்துள்ள வெங்கிஸ்வரர் சிவன் ஆலயத்தில் சிறப்பு அபிஷேகம் மற்றும் அன்னதான நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்வில், இவ்வாண்டிற்கான மண்டலத் தலைவர் டாக்டர் மகேஷ், வட்டாரத் தலைவர் அரிமா ராஜ், சங்கத்தின் தலைவர், செயலாளர், பொருளாளர், நிறுவனர் மற்றும் மூத்த உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

நிகழ்ச்சியின் நிறைவில், கலந்து கொண்ட அனைவருக்கும் சென்னை சங்கமம் சங்கத்தின் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.