டிஎன்பிஎஸ்சி தேர்வுகலில் அதிரடி மாற்றங்கள்

டிஎன்பிஎஸ்சி தேர்வுகலில் அதிரடி மாற்றங்கள்

குரூப்-4 மற்றும் குரூப்-2ஏ தேர்வுகளில் நடந்த முறைகேடுகளை சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில் முறைகேடுகளில் ஈடுபட்ட பலர் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. நாளுக்கு நாள் புதிய புதிய முறைகேடு தகவல்கள் வெளியாகி வருகின்றன. 

இந்நிலையில், டிஎன்பிஎஸ்சி நடத்தும் தேர்வுகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தேர்வாணையம் அறிவித்துள்ளது. அதில், குரூப் 4 மற்றும் குரூப் 2ஏ தேர்வுகள் முதல்நிலை, முதன்மைத் தேர்வு என இருநிலை தேர்வுகளாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 

அனைத்து கேள்விகளுக்கும் தேர்வர்கள் விடையளிக்க வேண்டும். காலை 10 மணிக்கும் நடைபெறும் தேர்வுக்கு தேர்வர்கள் காலை 9 மணிக்கே தேர்வுக் கூடங்களுக்கு வருதைத் தர வேண்டும். தேர்வு எழுதுபவர்களின் உண்மைத் தன்மையை உறுதி செய்ய, விதிமுறைகளை விளக்க முன்பே வரவேண்டும் என்ற தெரிவித்துள்ளது.