ஆற்றல் பாதுகாப்பை அடைவதற்கு இந்தியாவுக்கு எண்ணெய் மற்றும் எரிவாயுத் துறையில் கிட்டத்தட்ட 2,000 ஆய்வு உரிமங்கள் தேவை என்று வேதாந்தா குழுமத் தலைவர் கூறுகிறார்
அதிகரித்து வரும் நிலையற்ற புவிசார் அரசியல் சூழலில், இந்தியாவுக்கு எரிசக்தி சுதந்திரம் ஒரு மூலோபாயத் தேவையாக மாறியுள்ளது. அனில் அகர்வால் தனது சமீபத்திய ட்வீட்டில் கூறியது போல், " பகைமையான காலங்களில் முற்றுகையிடப்படக் கூடிய வகையில்" மூன்று பக்கமும் கடலால் சூழப்பட்டிருந்தாலும் நாம் 90% எண்ணெய் மற்றும் எரி வாயுவை இறக்குமதி செய்வதால் இந்தியா பாதிக்கப்படக்கூடிய நிலையில் உள்ளது". உலகின் வேகமாக வளர்ந்து வரும் எண்ணெய் மற்றும் எரிவாயு சந்தையாக இந்தியா தொடர்ந்து நிலைத்திருக்கத் தயாராக உள்ள நிலையில் உள்நாட்டு உற்பத்தி என்பது இனி ஒரு விருப்பத் தேர்வு அல்ல, அது மிகவும் அவசியமான ஒன்றாக இருக்கிறது.
இந்தியாவின் நன்மை அதன் மண்ணுக்கு அடியில் இருக்கிறது. "கயானாவின் ஆற்றல் வளத்தை விட 30 மடங்கு அதிகமான" 300 பில்லியன் பீப்பாய்கள் அளவுள்ள ஹைட்ரோகார்பன் வளங்களை இந்த நாடு கொண்டுள்ளது." இதனுடன், இந்தியாவின் உலகளாவிய திறமை பலமும் இணைந்துள்ளது; "உலகம் முழுவதும், இந்தத் துறையில் உள்ள நிபுணர்களில் 10% பேர் இந்தியர்கள் ஆவர்." இருப்பினும், பெரிய அளவிலான ஆய்வுப் பணிகள்தான் இதில் விடுபட்ட இணைப்பாக இருக்கிறது ."ஆய்வு இந்த வணிகத்தின் மையமாகும்," என்று அகர்வால் வலியுறுத்துகிறார், மேலும் ஆய்வுப் பணிகளைத் தொழில்முனைவோருக்குத் திறந்துவிட்டதன் மூலம், அமெரிக்கா இறக்குமதிச் சார்பு நிலையிலிருந்து தன்னிறைவு நிலைக்கு மாறிய உதாரணத்தையும் அவர் சுட்டிக் காட்டுகின்றார்.
தனது 15 ஆண்டு அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டு, அகர்வால், இந்தத் துறை ஏற்கனவே "கருவூலத்திற்கு 40 பில்லியன் டாலர்களை வழங்கியுள்ளது" மற்றும் கேர்ன் மூலம் 1.3 பில்லியன் பீப்பாய்களை வழங்கியுள்ள நிலையில், இந்தியா இறக்குமதிச் செலவில் பாதி விலையில் ஹைட்ரோகார்பன்களை உற்பத்தி செய்ய முடியும் என முக்கியப்படுத்தி கூறுகிறார்." ஆயினும்கூட, பிற துறைகளைப் போலல்லாமல், "இத்துறைக்கு PLI போன்ற அரசாங்கப் பாதுகாப்பு அல்லது ஊக்கத்தொகை எதுவும் இல்லை."
ஒழுங்குமுறை சார்ந்த நிச்சயமற்ற தன்மையே ஒரு முக்கிய கவலையாக நீடிக்கிறது. “இன்று இந்தியாவில் 2,000 உரிமங்கள் இருக்க வேண்டிய நிலையில் சுமார் 20 செயலில் உள்ள உரிமங்கள் மட்டுமே உள்ளன.” என்று அவர் கூறுகிறார். மேலும், “செயல்முறைகள், அறிவிப்புகள், நீதிமன்ற வழக்குகள் மற்றும் உரிமங்களைப் பறித்தல்" போன்ற அச்சம் உலக முதலீட்டாளர்களைத் தடுக்கிறது என்றும் அவர் எச்சரிக்கிறார். முதலீட்டாளர்களின் நம்பிக்கை எவ்வளவு பலவீனமாக இருக்கும் என்பதை விளக்குகின்ற வகையில் பரத்பூர் பறவைகள் சரணாலயத்தில் நடந்த "ஒரு சம்பவம்" பறவைகள் திரும்பி வருவதை நிறுத்தியதை நினைவு கூறுகிறார்.
உலக நிலவரங்களைப் பற்றி அகர்வால் தெளிவான பார்வையை கொண்டிருக்கிறார்: " இந்தியா உற்பத்தி செய்ய வேண்டும் என்று உலகம் விரும்பவில்லை. இந்தியா ஒரு சந்தையாக மட்டுமே இருக்க வேண்டும் என்று தான் விரும்புகிறது." ஆனால் வரலாறு வேறு விதமாக நிரூபித்துள்ளது. இந்தியா உணவு இறக்குமதியிலிருந்து தன்னிறைவு நோக்கி நகர்ந்தது போல, "அரசாங்கம் ஒரு இயக்கத்தை உருவாக்கியதால் இவை அனைத்தும் நடந்தன." ஆற்றல் துறைக்கும் இப்போது அதே தீர்மானம் தேவையாக இருக்கிறது
"எதிர்கால தேவைகளைப் பூர்த்தி செய்ய இந்தியாவின் உற்பத்தி பத்து மடங்கு அதிகரிக்க வேண்டும்" என்ற நிலையில், அரசாங்கம் வளர்ச்சி மற்றும் முதலீட்டை ஊக்குவிப்பதால்,வேதாந்தா நிறுவனம் தனது உற்பத்தியை ஐந்து மடங்கு அதிகரிக்க இலக்கு நிர்ணயித்துள்ளது. புத்தொழில் நிறுவனங்களும் சிறு தொழில்முனைவோரும் சுமார் ₹5 கோடி முதலீடுகள் மூலம் இதில் பங்கேற்பதன் மூலம் "நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான துளையிடும் இயந்திரங்கள் செயல்படுகின்றன" என்கின்ற வகையில் அவரது தொலைநோக்குப் பார்வை துணிச்சலானதாகவும் அனைவரையும் உள்ளடக்கியதாகவும் உள்ளது.
இந்தச் செய்தி சந்தேகத்திற்கு இடமின்றித் தெளிவாக உள்ளது: "கடுமையான ஒழுங்குமுறையிலிருந்து எளிதாக்குதலுக்கு மாறுவதற்கு இதுவே சரியான நேரமாக இருக்கிறது." எரிசக்தி சுதந்திரத்தை நோக்கிய இந்தியாவின் பயணம் நீண்டதாக இருக்கலாம், ஆனால் அகர்வால் முடிவாகக் கூறுவது போல, "நமது ஆற்றல் வளம் அபாரமானது."




