இன்று பிசிசிஐ தலைவராக பொறுப்பேற்கிறார் கங்குலி

இன்று பிசிசிஐ தலைவராக பொறுப்பேற்கிறார் கங்குலி

இன்று  பிசிசிஐ தலைவராக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி பொறுப்பேற்க உள்ளார்.பிசிசிஐ நிர்வாகிகள் தேர்வு கடந்த சில தினங்களாக நடைபெற்றது .இதற்காக பிசிசிஐ தலைவர் பதவிக்கு சவுரவ் கங்குலி வேட்பு மனு தாக்கல் செய்தார்.வேறு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாத நிலையில் கங்குலி தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.

மேலும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் மகன் ஜெய் ஷா செயலாளர் பதவிக்கும் ,பொருளாளர் பதவிக்கு பிசிசிஐ முன்னாள் தலைவர் அனுராக் தாகூர் சகோதரர் அருண் துமல் ஆகியோர் தேர்வாகி உள்ளனர்.

இந்த நிலையில் இன்று பொதுக்குழுக் கூட்டம் நடைபெறுகிறது.இந்த கூட்டத்தில் பிசிசிஐ தலைவராக கங்குலி பொறுப்பேற்க உள்ளார்.இவரை போல அமித்ஷாவின் மகன் ஜெய் ஷா,அனுராக் தாகூர் சகோதரர் அருண் துமல் உள்ளிட்டோரும் பொறுப்பேற்க உள்ளனர். தலைவராக பதவியேற்ற பின் கங்குலி பிசிசிஐ -யை செம்மைப்படுத்தும் பணிகளில் ஈடுபடுவார் என்ற எதிர்பார்ப்பு வெகுவாக எழுந்துள்ளது.