வேலூர் மாவட்டத்தில் இருந்து சென்னைக்கு குடிநீர் எடுத்துச் வந்தால் போராட்டம் - துரைமுருகன்

வேலூர் மாவட்டத்தில் இருந்து சென்னைக்கு குடிநீர் எடுத்துச் வந்தால் போராட்டம் - துரைமுருகன்

சென்னை: தமிழகம் முழுவதும் கடும் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது, சென்னை மக்கள் குடிக்க தண்ணீர் இல்லாமல் அவதிப்படுகின்றனர், இதனிடையே குடிநீர் திட்டப் பணிகளுக்காக கூடுதலாக 200 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று உத்தரவிட்டார். மேலும் வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் இருந்து தினமும் 10 மில்லியன் லிட்டர் குடிநீரை சென்னை வில்லிவாக்கத்திற்கு ரெயில்வே வேகன் மூலமாக கொண்டுவந்து தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் முதலமைச்சர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் ஜோலார்பேட்டையில் இருந்து ரெயிலில் சென்னைக்கு குடிநீர் எடுத்துச் சென்றால் போராட்டம் நடத்தப்படும் என திமுக பொருளாளர் துரைமுருகன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.