12ம் வகுப்பு முடித்து பொறியியல் படிப்பில் சேர்வதற்கு வேதியியல் பாடம் கட்டாயமில்லை

12ம் வகுப்பு முடித்து பொறியியல் படிப்பில் சேர்வதற்கு வேதியியல் பாடம் கட்டாயமில்லை

பொறியியல் படிப்பில் சேர பிளஸ்-2 வகுப்பில் வேதியியல் பாடம் கட்டாயம் இல்லை என்று ஏ.ஐ.சி.டி.இ. அதிரடி அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. பொறியியல் படிப்பில் சேர்வதற்கு இதுவரை இயற்பியல், வேதியியல், கணிதம்,  உயிரியல் அதேபோன்று கம்ப்யூட்டர் சயின்ஸ் ஆகிய பாடங்கள் கண்டிப்பாக இருக்க வேண்டும். இந்த பாடங்களை படித்திருந்தால் தான் பொறியியல் படிப்பில் சேர முடியும் என்ற விதிமுறை ஏற்கனவே அமலில் இருந்து வருகிறது. இந்த சூழலில் நாடு முழுவதும் பொறியியல் படிப்புகளுக்கான விதிமுறைகளை வகுத்து செயல்படுத்தக்கூடிய ஒரு அமைப்பான டெல்லியில் இருக்கக்கூடிய ஏ.ஐ.சி.டி.இ. எனப்படும் அகில இந்திய தொழில்நுட்ப கல்வி குழு என்ற அமைப்பு பொறியியல் படிப்பில் சேருவதற்கான விதிமுறைகளை வெளியிடுகிறது. அந்த விதிமுறைகளில் தான் இத்தகைய அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. இந்த தகவல் மாணவர்கள் மத்தியில் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.வேதியியல் பாடம் கண்டிப்பாக படிக்க வேண்டும் என்பது கட்டாயமல்ல. படித்திருந்தாலும் தவறில்லை என்பது தான் ஏ.ஐ.சி.டி.இ.-யின் தகவலாக இருக்கிறது.