தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 110 பேருக்கு கொரனா
![தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 110 பேருக்கு கொரனா](http://news.chennaipatrika.com/uploads/images/image_750x_5e81d70799cd8.jpg)
தமிழகத்தில் மேலும் 110 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை 234ஆக உயர்ந்துள்ளது. டெல்லி மாநாட்டில் கலந்து கொண்டவர்களில் இதுவரை 190 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மேலும் 77,330 பேர் வீட்டு கண்காணிப்பிலும் 81 பேர் அரசு முகாம்களிலும் உள்ளனர் என சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.